செந்தமிழ்சிற்பிகள்

க.நா.சுப்ரமண்யம் (1912 - 1988)

க.நா.சுப்ரமண்யம் 

(1912 - 1988)

அறிமுகம்

.நா.சு என்று பரவலாக அறியப்படும் . நா. சுப்ரமண்யம் (ஜனவரி 31, 1912 -டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த .நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, .நா.சு தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவுபுதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு.  1986ம் ஆண்டு அவரது  “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது

தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி  . நா. சு வின் மருமகன். எழுதவும் வாசிக்கவும் ஒருநாளில் பதினேழு மணி நேரங்களை செலவிட்டார். தமிழில் கோட்பாடுகள் அடிப்படையில் அல்லாமல் இரசனை அடிப்படையில் விமர்சன இலக்கியம் வளர்த்த முன்னோடி .நா.சு

தகைமைகளும் விருதுகளும்

சாகித்ய அகாதெமி விருது (1986)

தமிழ்நாடு அரசு சிறுகதை விருது- கோதை சிரித்தாள்

குமரன் ஆசான் விருது